Wednesday 11 July 2012

இன்று மட்டுமே அனுமதிக்கப்படும்
என் சுவாசக்காற்று இங்கு  சுற்றிச்செல்ல
என் பாதச்சுவடுகளை இங்கு நான் பதித்துச்செல்ல
என் சிந்தனைகள் சிலவற்றை இங்கு சிந்திச்செல்ல
என் கால நேரங்களை இங்கு கரைத்துச்செல்ல
என் கண்விழிகள் கணித்திரையை கண்டு செல்ல
என் கைவிரல்கள் விசைப்பலகையை தட்டிச்செல்ல -ஆனால்
எண்ணம் சிறிதும் எனக்கில்லை என்
தோழமையை இன்றோடு விட்டுச்செல்ல

சுழலும் பூமியால் தானே முடிகிறது
இருளையும் ஒளியாக்க

ஓடும் நதியால் தானே முடிகிறது
தன்னைத் தானே தெளிவாக்க

என்னையும் நான் இடம்பெயர்த்துச் செல்கிறேன்
தெளிவாக்க வேண்டும் என்பதற்காக அல்ல
தேங்கி விடக்கூடாது என்பதற்காக

அன்புடன்
கு.சா.வைரமுத்து
9965332336

No comments:

Post a Comment